ஐரோப்பாவில் வீட்டின் உரிமையாளர் : இலங்கையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்
புத்தளம், வென்னப்புவ பகுதியில் நபர் ஒருவரின் கைகள் மற்றும் கால்களைக் கட்டி, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உல்ஹிட்டியாவ பகுதியில், நபர் ஒருவரின் கைகள் மற்றும் கால்களைக் கட்டி, கொலை செய்துவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KDH ரக வேன் ஒன்று திருடிச் செல்லப்பட்டுள்ளது.
நேற்று மதியம் இந்த குற்ற செயல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் மாரவில, முதுகடுவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்
சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் இத்தாலியில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உயிரிழந்தவர் வீட்டில் காவலாளியாக பணியாற்றியவராகும். வெளிநாட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் உறவினர் ஒருவர் நேற்று வீட்டிற்குச் சென்றபோது, பாதிக்கப்பட்டவர் வீட்டின் ஒரு அறையில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடைகளற்ற நிலையில் உயிரிழந்த கிடப்பதைக் கண்டார்.
வென்னப்புவ பொலிஸார்
மேலும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வேனும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றத்தில் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சந்தேக நபர்களைக் கைது செய்ய வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
