ஈரானில் களமாடிய இஸ்ரேலிய மொசாட்: ஒரு அழிவின் யுத்தத்தை தொடங்கிய இஸ்ரேல்
ஈரான் மீது இஸ்ரேல்(Israel) இன்று மேற்கொண்ட தாக்குதல்களில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பெரும்பங்காற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இஸ்ரேலின் வான்படை ஈரானினுள் நுழைந்தபொழுது, ஈரானின் விமான எதிர்ப்புப் பொறிமுறைகள் அனைத்துமே செயலிழந்து காணப்பட்டதாகவும், மிக இலகுவாக, சுதந்திரமாக ஈரானின் எல்லைகளுக்குள் பறந்த இஸ்ரேலிய யுத்த விமானங்கள் தமது இலக்குகள் மீது தாக்குதல்களை நடாத்திவிட்டுத் திரும்பிச்சென்றதாகத் தெரியவருகின்றது.
ஏற்கனவே ஈரானுக்குள் ஊடுருவி நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய மொசாட் பிரிவுகள், பல்வேறு சதி நடவடிக்கைகள் மூலம் ஈரானின் விமான எதிர்ப்புப் பொறிமுறைகளையும், விமான எதிர்ப்பு எவுகணைகளையும் செயலிழக்கவைத்திதுவிட்டிருந்ததாக டைம்ஸ் ஒப் இஸ்ரேல் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி..