யுவதியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை (Trincomalee) - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 19 வயதுடைய யுவதி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரை இம்மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.
கந்தளாய் நீதிமன்ற நீதவானால் இன்று (12.07.2024) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேரமடுவ - அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காதல் உறவு
குறித்த நபர், 19 வயதுடைய யுவதியை ஒரு வருட காலமாக காதலித்து வந்த நிலையில் யுவதியின் வீட்டுக்கு தெரியாமல் அவரை வான்எல பகுதிக்கு அழைத்துச் சென்று தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக தெரிவித்து அக்போபுர பொலிஸ் நிலையத்தில் யுவதியின் பெற்றோர்கள் முறைபாடு செய்துள்ளனர்.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் யுவதி மருத்துவ அறிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri