துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபர்
முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக நபரொருவர் இன்று(11) காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, குறித்த நபர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும்,பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும், 2017ஆம் ஆண்டு வரட்சி நிவாரணம் வழங்கியமை தொடர்பில் அதன் தெரிவு பட்டியல் தொடர்பிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
உண்ணாவிரத போராட்டம்
காணிப்பினக்குகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்க வேண்டும் மற்றும் காணிகள் வழங்கப்படவேண்டும், கிராம அலுவலர் கிருஸ்னரூபன் கலைச்செல்வியின் தண்டனை பணியிட மாற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணையும் தீர்வும் வேண்டும் என்று கூறியே அவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அத்தோடு, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர் கருத்து கோரிய போது கருத்துதர மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதேவேளை இது தொடர்பில் துணுக்காய் பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ் கருத்து தெரிவிக்கையில், கிருஸ்னரூபன் இன்றைய தினம் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் குறிப்பிடுகின்ற விடயங்கள் அனைத்தும் எனது நிர்வாக காலப்பகுதியில் இடம் பெறவில்லை. இது தொடர்பில் அவர் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் ,பிரதமர் செயலகம் ,ஆளுநர் அலுவலகம் ,மாவட்ட செயலகம் உள்ளிட்ட தினைக்களங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளார்.
விசாரணைகள்
இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட செயலாளருடைய புலனாய்வு பிரிவினரால் அது தொடர்பிலான ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது, இது தொடர்பாக மாவட்ட செயலாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவர் தனது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமையாக இருந்தாலும் அது தொடர்பில் விசாரணை முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை நான் கூறமுடியாது. அவர் போராட்டம் நடாத்துகின்ற இடத்துக்கு எமது உதவி பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தேன்.
ஆனால் அவர் கதைப்பதற்கு உடன்பாடில்லை நான் கதைக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார்.
அவரின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரை அணுகி அவரின் வேண்டுகோளை விரைவுபடுத்த முடியும் ,மேலும் இது தொடர்பிலான அறிக்கைகளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
