காலியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! ஒருவர் வெட்டிப் படுகொலை
காலி, நாகொடை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(13.5.2026) இடம்பெற்றுள்ளது.
வட்டிக்குப் பணம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டபோது மேற்படி நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam