யாழில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை: பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(14.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ,துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் (வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் பொலிசாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.