ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் பரிதாபமாக மரணம்
இலங்கைக்கு சுற்றுலா பணம் மேற்கொள்ள நெதர்லாந்தில் இருந்து வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எல்ல பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட்ட வெளிநாட்டவர் நேற்று வளைவு பாலத்திற்கு அருகில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நெதர்லாந்தின் வெனிசுலாவில் வசிக்கும் டச்சு நாட்டவரான அன்டோனியஸ் பீட்டர் என்ற 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய பிரஜை மரணம்
அவர் தனது 62 வயது காதலி மற்றும் 18 டச்சு நாட்டவர்கள் கொண்ட குழுவுடன் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்திருந்தார்.

பின்னர், அவர்கள் எல்ல பகுதியை பார்வையிட வந்து பண்டாரவளை நகரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா ஹோட்டலில் தங்கினர்.
நேற்று எல்ல வரலாற்று சிறப்புமிக்க ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட குழு வந்தபோது, இந்த நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri