காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ தினமான நேற்று விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது காத்தான்குடி பிரதேசத்தில் வைத்துக் குறித்த இளைஞர் வசமாக சிக்கியுள்ளார.
இந்த சந்தர்ப்பத்தில் அவரது உடமையிலிருந்து 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.