9 மாத குழந்தையை கட்டி வைத்து அடித்த நபர்.. அரசில் உயர் பதவியில் உள்ளவர்களின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஒன்பது மாதக் குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் வயிற்றை நாற்காலியில் கட்டி, குடையின் கைப்பிடியாலும் கைகளாலும் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா ஜூலை 3ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார், பேட்டை, பெஸ்டியன் மாவத்தையை சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை..
நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்தபோது, சிறுமியை நாற்காலியில் கட்டிப்போட்டு, இரும்புக் கம்பி மற்றும் கையால் கடுமையாகத் துன்புறுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 21 ஆம் திகதி காலை சுமார் 7.30 மணியளவில், குழந்தை கொடூரமாகத் தாக்கப்படுவதைக் கண்ட ஒருவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளது. இந்தச் சிறுமி இதற்கு முன்னரும் இரவில் தாக்கப்பட்டிருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாரியபொலவைச் சேர்ந்த 23 வயதான அப்பெண்ணின் தாய், அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பெற்றோரின் மகள் என பொலிஸாரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் உயர் பதவி..
அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்து, பத்தும் அனுருத்த என்ற வேலையில்லாதவரை மணந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு, வேலை தேடும் நோக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு அக்குழந்தையுடன் கொழும்புக்கு சென்றுள்ளார்.

அங்கு, குழந்தையின் தந்தை, தாயையும் குழந்தையையும் இந்த சந்தேக நபரின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலை தேடிச் சென்றுள்ளார். மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியும் அவர் திரும்பவில்லை.
இந்நிலையிலேயே, தாக்குதலில் காயமடைந்த குழந்தை தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சந்தேக நபரை மேலும் காவலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை சிறுவர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி, அவரை நன்னடத்தையின் கீழ் வைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது சந்தேக நபருக்காக எந்த சட்டத்தரணியும் முன்னிலையாகவில்லை. முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதித்துறை நடுவர், சந்தேக நபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO