யாழில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளி கோவில் பகுதிக்கு அண்மித்த இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (02.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது 23 சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று (02) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் மாவா மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் சுன்னாகம் பொலிஸ் நிலையம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இன்று (03) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்குறித்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri