மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நபர் கைது
லண்டன் - வெஸ்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்துபவர்கள் வரிசையில் காத்திருந்து, மகாராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழை நோக்கி சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (16.09.2022) இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துண்டிக்கப்பட்டிருந்த காணொளி ஒளிபரப்பு
இந்த சம்பவத்தையடுத்து நேரடி காணொளி ஒளிபரப்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும்
திங்கட்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.