யாழில் வீட்டில் கஞ்சா செடியினை வளர்த்தவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் உள்ள வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 அடி 700 cm நீளமான கஞ்சா செடியினை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இன்றையதினம் (10.05.2024) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தமையிலான யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு குறித்த நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |