இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை வந்த நபர் கைது
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்து தங்கிருந்த நபரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த நபர் முள்ளியவளை பிரதேசத்தில கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நபர் கடந்த 2009 ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இந்தியாவில் நாகப்பட்டினம் பிரதேசத்தில் வசித்து வந்த அவர் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்த சந்தேக நபர் சுமார் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளதுடன் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam