யாழில் மனைவியின் காதை வெட்டியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம்(Jaffna) - சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று இன்றையதினம்(11) உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காது சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்தநிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதினை வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
விளக்கமறியல்
பாதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் குறித்து கடந்த 10.10.2024 அன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக வேறு சில முறைப்பாடுகளும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இந்தநிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் மனைவியின் மீதுபல்வேறு சித்திரவதைகளை புரிந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் (11) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
