குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை

India Canada Colombia
By Sivaa Mayuri Jul 15, 2022 02:08 PM GMT
Report

ஏர் இந்தியா விமானம் மீது 1985 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ரிபுதமன் சிங் மாலிக் என்பவரே பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் தனது சிற்றூந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது இன்று(15) சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருடைய சிற்றூந்து எரிந்த நிலையில் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை | Man Acquitted In Blast Case Shot Dead

329 பேரை கொன்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டு 2005 இல் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சீக்கிய மதத்தின் புனித தலமான பொற்கோவிலை 1984ல் இந்தியா தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவை தளமாக கொண்ட சீக்கியர்களால் 1985ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

அந்த சம்பவம் கனடாவின் கொடிய பயங்கரவாத தாக்குதலாகவே தற்போது வரை உள்ளது.

இரண்டு வருட விசாரணைக்கு பிறகு சீக்கிய தொழிலதிபர் மாலிக் மற்றும் இணை குற்றவாளியான அஜய்ப் சிங் பக்ரி ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை | Man Acquitted In Blast Case Shot Dead

கனேடிய பொலிஸார் மாலிக்கை குறிவைத்து கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை கண்டறிய இன்னும் பணியாற்றி வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்

கனடாவில் இருந்து இந்தியாவிற்கு பயணித்த ஏர் இந்தியா வானூர்தி ஐரிஷ் கடற்கரையில் வெடித்து சிதறியது. அதில் இருந்த 329 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் கனேடிய குடிமக்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றவர்களாவர்.

குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை | Man Acquitted In Blast Case Shot Dead

அதே நாட்களில் ஜப்பானில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பொதிகளை கையாளும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களின் பின்னர், பக்ரி மற்றும் மாலிக் ஆகியோர் விமானத்தில் குண்டுகளை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US