மாளிகாவத்தையில் பட்டப் பகலில் நடக்கும் பயங்கரம் சம்பவம்
கொழும்பு - 10 மாளிகாவத்தை லக்கிரு செவன தொடர் மாடியில் பட்டப் பகலில் பாரியளவில் ஹெரோயின் விற்பனை நடைபெறுவதாக தகவல்களில் தெரியவந்துள்ளது.
மாளிகாவத்தை லக்கிரு செவன தொடர்மாடியில் வசிக்கும் ஒரு பெண்ணே இந்த பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார்.
பட்டப் பகலில் விற்பனை
காலை-பகல்-மாலை நேரங்களில் இது நடைபெறுகிறது. போதைப்பொருள் விற்பனை செய்யும் போது பெண்களும் முண்டியடுத்துக் கொண்டு வாங்குவதாக தெரியவருகிறது. ஹெரோயின் போதைப்பொருளை வழங்குவதற்கு முன்னர் பணம் சேகரிக்கும் செயற்பாடுகளில் பலர் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் போது, இதை இந்த செற்பாடுகளின் முக்கிய நபரான பெண் அவதானித்த வண்ணம் இருப்பார்.
விற்பனையில் ஈடுபடும் பெண்
பின்னர் அவர் முச்சக்கர வண்டியில் போதைப்பொருளுடன் ஒளிந்திருப்பார். பணம் பெற்றுக் கொண்ட பெண்ணின் ஆட்கள் முச்சக்கர வண்டியில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் பணத்தை கொடுத்த பின்னர் அந்த பெண் முச்சக்கரவண்டியில் இருந்தவாறு போதைப்பொருட்களை கீழே போட்டு விட்டு எவ்வித பயமுமின்று அங்கிருந்து செல்வார்.

இந்த பாரிய பயங்கர நிகழ்வுகள், கொழும்பு -10 மாளிகாவத்தை லக்கிரு செவன தொடர்மாடியில் B-ப்ளொக் மற்றும் C-ப்ளொக் பகுதியில் நடைபெறுவதாக தெரியவருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri