இலங்கைக்கு வருகைதரும் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்! வெளியான காரணம்
மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை பெப்ரவரி 18 முதல் 21 வரையில் மேற்கொள்ளவுள்ளார்.
கலந்துரையாடல்
வெளியுறவு அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவுகளின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனாயாவும் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின் போது, மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.
மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
