துருக்கியில் இருந்து இராணுவ ட்ரோன்கள் வாங்கிய மாலைதீவு
கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து ட்ரோன்களை மாலைதீவு அரசு வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து முதல் முறையாக இராணுவ ட்ரோன்கள் மாலைதீவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதோடு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ ஒத்துழைப்பு
மேலும், அந்நாட்டுடன் இராணுவம் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையிலே கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து ட்ரோன்களை மாலைதீவு அரசு வாங்கியுள்ளது.

குறி்த்த ட்ரோன்கள் தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் ட்ரோன்கள் செயல்பாடு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளதோடு, எத்தனை ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri