வெளியில் வரப்போகும் மக்களுக்கு தெரியாத உண்மைகள்: முன்னாள் ஜனாதிபதிக்கு ஆபத்தா..!
மக்கள் அறியாத பல உண்மைகளை உள்ளடக்கிய புத்தகத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாகவும், சில நேரங்களில் புத்தகம் வெளிவந்த பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நெருக்கடி, எதிர்காலம் மற்றும் வரவு செலவு திட்டம் என்ற தலைப்பில் இலங்கை சுதந்திர தொழில் வல்லுநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் எழுதிய புத்தகத்தை ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நூலில் நாட்டு மக்களுக்கு தெரியாத சில உண்மைகள் உள்ளதாகவும், சில நேரங்களில் புத்தகம் வெளிவந்த பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri