எதிர்வரும் காலங்களில் யாழிற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் - சீன தூதுவர்
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் நீண்ட கால வரலாற்றினை கொண்ட யாழ். பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டமையிட்டு நான் மகிழ்வடைகின்றேன்.
யாழ். நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் மற்றும் யாழ். மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் நூலகம் பற்றிய முழு விபரங்களையும் எமக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.
மொழி ரீதியாக நாங்கள் வேறுப்பட்டவர்களாக
இருந்தாலும், நாங்கள் இயல்பான ஒரே கொள்கையில் உள்ளவர்கள். எனவே எமது பயணம்
இணைபிரியாமல் ஒரு பொருளாதார ரீதியான கட்டமைப்பினை
வலுப்படுத்தே எமது எதிர்பார்ப்பு.
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்,
இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு இந்த நூலகத்தினை இணையவழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா என கோரிக்கையை முன்வைத்தபோது தாங்கள் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருந்தார் என தெரிவித்துள்ளார்.
இங்கு யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ். மாநகர சபை ஆணையாளர்
த.ஜெயசீலன் உள்ளிட்ட இலங்கைக்கான சீனா நாட்டுத்தூதுவர்களின் உயர் அதிகாரிகள்
பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்தி..............
இலங்கைக்கான சீன தூதுவர் பலத்த பாதுகாப்புடன் யாழ் விஜயம் (Video)