கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதான பாதையை விடுவிக்க டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்கான பிரதான பாதையை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்(Douglas Devananda) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், பாடசாலையின் மைதானத்திற்கான பிரதான பாதையில் அமைந்துள்ள இராணுவ முகாம், மாணவர்களின் மைதானச் செயற்பாடுகளுக்கு அசௌகரியமாக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
தொடர் நடவடிக்கை
குறித்த கோரிக்கை தொடர்பாக அமைச்சர் முன்னெடுத்த தொடர் நடவடிக்கையினால், இராணுவ முகாமின் ஒரு பகுதியை விடுவித்து மைதானத்திற்கான பாதையை வழங்குவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தினரால் விடுவிக்கப்படவுள்ள பகுதியை இன்று பார்வையிட்டச் சென்ற அமைச்சரை வரவேற்ற, குறித்த பகுதிக்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெவர்த்தன, சம்மந்தப்பட்ட பகுதிகளை அமைச்சருக்கு காண்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

IQ test: இங்கு ஏழைக் குடும்பம் எது? 5 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
