மஹிந்தவின் முடிவிற்கு மாறாக மைத்திரியின் அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
கட்சியின் மத்திய குழு மற்றும் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மே தின கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் அலரிமாளிகையில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்தவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேதினக் கூட்டத்தை தனித்து நடத்தப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,