ரணிலின் கட்சியுடன் இணைகிறதா பொதுஜன பெரமுன....! மகிந்த பதில்
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தை காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் திரண்டுள்ளதாகவும், சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் கட்சியை விட்டு நகராது மீண்டும் கட்சி துளிர்விடும் என்ற நம்பிக்கையில் உள்ளதினை கட்சியின் மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றி
இருப்பினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை என்றும், கட்சி சார்பில் யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்சக்கள் பாடுபடுவார்கள் என்றும் மகிந்த உறுதியளித்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri