மகிந்தானந்தவை கைது செய்ய உத்தரவு..
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்யுமாறு நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே,நேற்று முன்தினம் (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
பிடியாணை
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான விடயத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்னரே அவர் இவ்வாறு மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
அதன்படி, இந்த கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று(16) மகிந்தானந்த அளுத்கமவை கைது செய்யுமாறு நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
