அநுரவின் அபிவிருத்தியை மிஞ்சும் மகிந்தவின் 540 மில்லியன் செலவு!
2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை ஒன்றிற்கு அமைவாக, தனது சொத்து விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அரகலய காலத்தில் மக்கள் துன்பப்பட்ட நேரத்தில் மகிந்தவின் வீட்டு புனரமைப்பு பணிகளுக்காக 540 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதனை ஒப்பிட்டு மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட ஈரானிய தூதுக்குழுவினர்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்