மகிந்தவை கைது செய்யுமாறு வெளிநாட்டு பெண் ஒருவர் கோரிக்கை
பதவி விலகிய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி வெளிநாட்டு பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள குறித்த பெண் காலியில் இன்று தனி ஒருவராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன், மகிந்தவும் பதவி விலகி உள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபயவும் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் குறித்த வெளிநாட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். “Arrest Mahinda” என்ற வாசகம் அடங்கிய பாதாதையுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.



சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri