மகிந்தவை கைது செய்யுமாறு வெளிநாட்டு பெண் ஒருவர் கோரிக்கை
பதவி விலகிய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி வெளிநாட்டு பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள குறித்த பெண் காலியில் இன்று தனி ஒருவராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன், மகிந்தவும் பதவி விலகி உள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபயவும் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் குறித்த வெளிநாட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். “Arrest Mahinda” என்ற வாசகம் அடங்கிய பாதாதையுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.



முதல் நாளிலேயே நல்ல வசூல் வேட்டை செய்துள்ள விஜய் ஆண்டனியின் நூறு சாமி திரைப்படம்... கலெக்ஷன் விவரம் இதோ Cineulagam
பாசத்துக்கு மட்டுமே கட்டுப்படும் டாப் 3 பெண் ராசிகள் - இவர்கள் உறவாக கிடைப்பதே பெரும் வரம்! Manithan