மகிந்தவை கைது செய்யுமாறு வெளிநாட்டு பெண் ஒருவர் கோரிக்கை
பதவி விலகிய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி வெளிநாட்டு பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள குறித்த பெண் காலியில் இன்று தனி ஒருவராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன், மகிந்தவும் பதவி விலகி உள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபயவும் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் குறித்த வெளிநாட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். “Arrest Mahinda” என்ற வாசகம் அடங்கிய பாதாதையுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.



தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri