மகிந்த ராஜபக்சவிற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, கோட்டை நீதவான் மன்றம் வெளிநாடு செல்ல இன்று (11.01.2023) அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
காலி முகத்திடல் தாக்குதல்
கடந்த வருடம் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மகிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவரது சட்டத்தரணியினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
10 நாட்களுக்கு அனுமதி
அதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கோட்டை நீதவான் திலின கமகே வழங்கியுள்ளார்.

இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இதற்கமைய அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்து, விசாரணையை மார்ச் 28ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam