ஆளும் கட்சிக்குள் முரண்பாடு மஹிந்த ராஜபக்ச எடுத்த முடிவு!
ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையில் இன்றைய தினம் அலரி மாளிகையில் மாலை 6.00 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் விசேட கூட்டமொன்றை நடாத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மைத்திரி தரப்பு, விமல் தரப்பு, வாசுதேவ தரப்பு, உதய கம்மன்பில தரப்பு உள்ளிட்ட ஏனைய தரப்புக்களுக்கு இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri