மகனுக்காக மகிந்த ராஜபக்ச தீட்டும் திட்டம்: காலியிலுள்ள உல்லாச விடுதியில் முக்கிய பேச்சுவார்த்தை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மகனை ஜனாதிபதியாக்குவதற்காக தனது சுகவீனத்தையும் பொருட்படுத்தாது, காலி ஹுனவட்டுனவில் உள்ள டட்லி சிறிசேனவுக்கு சொந்தமான அரலியா பீச் ஹோட்டலில் தனது அரசியலில் நெருங்கிய இரு நண்பர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
நாமல் எதிர்கால ஜனாதிபதியாவதென்றால் தன்னுடன் ஒரு பலமான அரசியல் பின்புலம் தேவையாக உள்ளது.
இன்று நாமலுடன் இருப்பவர்களை பார்த்தால் திஸ்ஸ குட்டியாராச்சி,டி.பி.சானக்க,மிலிந்த ராஜபக்ச என்று அடுக்கி கொண்டு போனாலும் பலமான அரசியல்வாதிகள் இல்லை.இவர்களின் பேச்சு மக்களிடம் பெருவாரியாக எடுப்படாது.
மஹிந்தவின் இரசிய காய்நகர்த்தல்
அண்மையில் நாமல் இந்தியா போய் வந்தது கூட பெரிதாக பேசப்படவிட்டாலும் சமூக ஊடகங்களில் வைராக்கப்பட்டது எல்லாம் நகைப்புக்கிடமானதாகவே இருந்தது.
நாமலின் ஒவ்வொரு செயற்பாடுகள் பேசுபொருளாக்கப்பட்டாலும் அதில் காத்திரமான செயற்பாடுகள் இருக்கவில்லை. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் காத்திரமான செயற்பாடுகள் குறைவென்பதால் நாமல் வெளிப்படையாக பேசப்படுகிறார்.
இன்றுள்ள என்பிபி அரசுக்கு சவால் விடுக்க கூடிய வகையில் இருக்கவில்லை.அதனால் நாமலுக்கு ஒரு பலமான அரசியல் பரிவாரங்களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் தான் மஹிந்த இவ்வாறான சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
டலஸ் அழகப்பெரும தென் மாகாணத்திலும் மட்டுமல்ல நாட்டில் பெரும் அரசியல்வாதியாவார்.கடந்த காலங்களில் கோட்டாபயவுடன் முரண்பட்டுக் கொண்டு மஹிந்த குடும்பத்தை விட்டும் அரசியலில் ஒதுங்கே இருந்தார்.

நாமலின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.ஆனால் மஹிந்தவுடன் உள்ள நெருக்கமான நட்பை பேணி வந்தவர்.வீரசுமன வீரசிங்கவும் முக்கியமானவர்.
இவர் திலித் பக்கமும் சில காலம் இருந்தார். இவர்கள் இருவரையும் மஹிந்த (30.01.2026) சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நாமலுக்காக தனது பழைய அரசியல் நண்பர்களை எப்படியாவது இணைத்து கொள்ள வேண்டும் என தனது வயதையும் பொருட்படுத்தாவது பணியில் இருங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பெரு வாரியாக பேசப்படுகிறது.