பாதுகாப்பு அதிகாரிகள் மீது முன்விரோதம் காட்டும் அநுர.. நாமல் வழங்கிய அறிவுரை
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ராஜபக்சக்களின் தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மோசமான முறையில் நடத்துவதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
அதாவது, ஜனாதிபதி அநுரவுக்கு நாட்டின் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் முன்விரோதங்கள் இருக்கலாம், ஆனாால் அவற்றை இப்போது மனதில் வைத்துக் கொண்டு அவர்களை மோசமாக நடத்தக் கூடாது என குறிப்பிட்டார்.
இருப்பினும், ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் உண்மையில், குறித்த அதிகாரிகள் சரியான முறையில் நடத்தப்பட்டனரா என்னும் கேள்வி இங்கு எழுகின்றது.
இது உட்பட தற்போது இலங்கை அரசியலில் பேசுபொருளாகியுள்ள பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,