சவேந்திர சில்வாவை வெளியேற்றும் தீவிர முயற்சியில் மஹிந்த கும்பல்
பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம் பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையினலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது கோபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிராக தீவிரம் அடைந்த போராட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.
அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா, வன்முறையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.