மகிந்தவின் நாயை காணவில்லை - வீட்டுக்கு அருகில் சிக்கிய யுவதி
வீரகெட்டிய, கார்ல்டன் தோட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அங்கிருந்த நாய்க்குட்டி காணாமல் போயுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டின் முன் இருந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்ததாக அந்த யுவதி கூறிய போதிலும் கார்ல்டன் தோட்ட பாதுகாப்பு அதிகாரிகள் யுவதியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தோட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அந்த யுவதி அங்கிருந்த நாய்க்குட்டியை எடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
