மஹிந்தவுக்கு நெருக்கமான பெண் ஒருவரி்ன் மோசடி அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக பணியகத்தில் உள்ள செயலாளர் ஒருவரின் மனைவிக்கு முறையற்ற வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கையில் ஆராய்ச்சி நிறுவனமொன்றின் தலைவராக குறித்த பெண் நியமிக்கப்பட்டுள்ளர். அவர் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே அங்கு பணிக்கு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தலைவரின் நியமனம் கடந்த மாதம் துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய பெண் சாதாரண தர பரீட்சையில் கூட சித்தியடையவில்லை என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும், அவரின் கீழ் 12 முதுநிலை பட்டதாரி அதிகாரிகள் பணிபுரிவதாக மேற்கண்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆய்வு தொடர்பில் எந்தவித அறிவும் இல்லாத இந்த தவிசாளருக்கான ஒரே தகுதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழியர்களின் செயலாளரின் மனைவியாக இருப்பது மட்டுமே எனவும் அரசாங்கப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri