அதிகாரிகள் பரிந்துரை செய்தால் நாட்டை முடக்கும் தீர்மானத்தை அமுல்படுத்த முடியும் - மஹிந்த அமரவீர
நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென அதிகாரிகள் பரிந்துரை செய்தால் அதனை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்குமாறு பலர் கோரி வருகின்ற போதிலும் கடந்த காலங்களில் நாடு முழுமையாக முடக்கப்பட்ட போது ஏற்பட்ட அசௌகரியங்களை நினைத்துப் பார்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்கினால் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்றட்டால் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் முழு அளவிலான முடக்க நிலைமை அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை முடக்குவது மிகவும் இலகுவானது என்ற போதிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானது என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
