மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, மகாவலி ஆறு நிரம்பி வருகின்றது.
இந்தநிலையில், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு - நீலபொல வீதியே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நீர்மட்டம் அதிகரிப்பு
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதால் நீலபொல ஊடாகச் செல்லும் மகாவலி பாதுகாப்பு அணைக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, குறித்த வீதி பாரியளவில் அரிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மாவிலாறு நீர்த்தேக்கம் பெருக்கெடுத்த போது இப்பகுதி சேதமடைந்திருந்த நிலையில், இராணுவத்தினர் தற்காலிகமாகச் சீரமைத்து கொடுத்துள்ளனர். ஆனாலும், தற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த தற்காலிக சீரமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம்
குறிப்பாக, இந்த வீதியின் ஊடாகவே மூதூர், தோப்பூர் மற்றும் நீலபொல ஆகிய பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான விநியோகக் குழாய்கள் செல்கின்றன. வீதி சேதமடைந்துள்ளதோடு, நீர்க்குழாய்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் முற்றாகத் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மகாவலி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகக் காணப்படுவதால், சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாதுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், "வெள்ள நீர் வடிந்த பின்னரே சேதமடைந்த நீலபொல பாதுகாப்பு அணை மற்றும் நீலபொல – தெஹிவத்த வீதியை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வெள்ள அபாயம் நீடிக்கும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam