கனடாவில் மாயமான 3 வயது சிறுமி: அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார் (PHOTOS)
கனடாவில் மூன்று வயது சிறுமி மாயமான விவகாரம் தொடர்பில் ஒன்ராறியோ பொலிஸார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்ராறியோவின் பாரி பகுதியில் மூன்று வயதான Arabella Vienneau எனும் சிறுமி திடீரென காணாமல்போயுள்ளார்.
Tunbridge சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் சிறுமி கடைசியாக அடையாளம் காணப்பட்டதாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி தொடர்பில் பொலிஸார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,சிறுமியின் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.
3 அடி உயரம் கொண்ட சிறுமி, சுமார் 30 முதல் 40 lbs எடை இருப்பார் எனவும், அவருக்கு பச்சை நிற கண்கள்,பொன்னிற தலைமுடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை கடத்தியவர் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் பாதுகாப்பு தொடர்பில் கவலை கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam