இதனைச் செய்தால் ட்ரம்புக்கு நோபல் பரிசு! பிரான்ஸ் ஜனாதிபதி திட்டவட்டம்
காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.
நோபல் பரிசு
தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய நபராக ட்ரம்ப் இருக்கிறார்.
காசாவில் இஸ்ரேல் அரசு தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன்.
இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். ஆனால் இந்தியா இதனை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, 7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.





திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
