விடுதலைப் புலிகளைப் போல காட்டப்படும் சிறுவர்கள்: நாட்டை பறித்தது நாமா... தேரரின் இனவாத பேச்சு(Video)

Sri Lankan Tamils Northern Province of Sri Lanka Maaveerar Naal
By Benat Dec 02, 2023 07:21 AM GMT
Report

வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தின்போது, விடுதலைப் புலிகளைப் போல உடை அணிவித்து சிறுவர்களை அழைத்து வந்துள்ளனர்.  இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அத்துடன், எமது தரப்பினர் இந்த சிறுவர்களின் நாட்டை பறித்ததை போன்ற எண்ணத்தை சிறுவயதிலேயே, அவர்களுக்குள் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் திணிப்பார்கள் என்று சிங்களராவய  அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டடார். 

வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

இலங்கையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவற்றை பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன. இதற்கமைய, நீதிமன்ற உத்தரவின்றி, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிக்கப்பட்டால், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறாக கைது செய்யப்படுபவர்களை இலகுவாக பிணையில் விடுதலை செய்ய முடியாது.


எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் நீதி சரிவர செயல்படாதுள்ளது. அரசியல் காரணங்கள் காரணமாக குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.

அண்மையில் வடக்கு கிழக்கில் விடுதலப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வொன்று இடம்பெற்றது. இது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நினைவேந்தல்களை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளின் சமாதிகளை வைத்து இந்த நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை போன்று அங்குள்ள சிறுவர்களுக்கு ஆடை அணிவித்து இந்த நினைவேந்தல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தவறான உதாரணங்களை இதன் மூலம் காட்டுகிறார்கள்.

அத்துடன், எமது தரப்பினர் இந்த சிறுவர்களின் நாட்டை பறித்ததை போன்ற எண்ணத்தை சிறுவயதிலேயே, அவர்களுக்குள் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் திணிப்பார்கள்.

இந்த நிலையில், இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை முப்படையினர் எடுக்க வேண்டும். இலங்கையில் நீதி சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை!

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US