சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை
உள்ளுர் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மரக்கறி வியாபாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையகம் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக உள்ளூர் சந்தையில் தேவைக்கேற்ப மரக்கறிகள் இல்லாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்கறிகளின் விலை
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சு ரூ.600/=, கரட் ஒரு கிலோ ரூ.450/=, கத்திரிக்காய் ரூ.300/=, தக்காளி ரூ.480/=, மிளகாய் ரூ.700/=, பச்சை மிளகாய் ரூ.1500/=, குண்டு மிளகாய் ரூ.2000/=லீக்ஸ் ரூ 280/= என அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோ ரூ 400-500 வரை உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்காக குறைந்த அளவே காய்கறிகளை வாங்குவதாக நுகர்வோர் குறிப்பிட்டுனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
