மாவையின் 31ஆவது நாள் நினைவையொட்டி பிரித்தானியாவில் வணக்க நிகழ்வு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) 31 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவில் (United Kingdom) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வானது, ஹெரொவ் ஆர்ட்ஸ் சென்டரில் (Harrow Arts Centre) எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதன்படி, நாளை மறுதினம் பிற்பகல் 6.30 முதல் 9.30 வரை மறைந்த அரசியல் தலைவர் மாவைக்கான அஞ்சலிகளை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலி
இந்த நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்துகொண்டு மாவை சேனாதிராஜாவிற்கு அஞ்சலிகளை செலுத்திக்கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி காலமானார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |