இரவில் தீப்பற்றி எரிந்த ஆடம்பர வாகனங்கள்
தங்காலை பொலிஸ் பிரிவின் நாகுலுகமுவ இஹலகொட பகுதியில் ஆலயம் ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆடம்பர வாகனங்கள் நேற்றிரவு தீப்பிடித்து அழிந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆடம்பர கார், இரண்டு வான்கள் இவ்வாறு தீயில் அழிந்துள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் நான்கு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 10.30 அளவில் இனந்தெரியாத சிலர் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கொளுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாத்தறை நகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முதலில் கார் எரிந்துள்ளதுடன் பின்னர், வான்கள் தீப்பற்றி எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
