தீயில் எரிந்து நாசமான அதிசொகுசு வாகனம்!
காலி - மாத்தறை பிரதான வீதியின் உனவட்டுன பில்லகொட பிரதேசத்தில் இன்று (19) இரவு 8.45 மணியளவில் சொகுசு வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த குறித்த வாகனம் பில்லகொட பிரதேசத்தில் தீப்பிடித்துள்ளதுடன், சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகளும் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.