இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான சிவப்பு எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மாகாணங்களிலும் - ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 - 70 வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,