வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கு வெளியானது புதிய சுற்றறிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கை சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து வருகைதரவுள்ள பயணிகளுக்கு பொருந்தக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடிமக்கள் தங்கள் வீடுகளில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த 14 நாட்களில் இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகை / போக்குவரத்து / பயண வரலாறு உள்ளவர்களுக்கு இந்த வீட்டு தனிமைப்படுத்தல் வசதி பொருந்தாது.
முழுமையாக தடுப்பூசி போடாமல் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,