இலங்கைக்கு விரைவில் ஏற்படவுள்ள நிலை - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு
தற்போதைய அரசாங்கம் தனியொரு அதிகார மையத்திடம் மாத்திரம் சிக்கிக் கொண்டு, ஏனைய நாடுகளிடமிருந்து விலகியிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமாக இருந்தால், எமது நாடு சிரியாவின் நிலையையே அடைய நேரிடும் எனவும் கடும் எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இணையவழி கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை காலமும் எதிர்கொண்டிருக்காத வகையிலான பாரிய அனர்த்தமொன்றை நோக்கி நாம் இப்போது தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
1948ஆம் ஆண்டளவில் ஆசியநாடுகளின் அபிவிருத்தியை, குறிப்பாக அவற்றின் மொத்த தேசிய உற்பத்தியை எடுத்துநோக்குகையில் ஜப்பான் மாத்திரமே முன்னிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,