இலங்கையில் எல்லைமீறும் கோவிட் - கட்டுப்படுத்த முடியாத நிலையில் சுகாதார பிரிவு! செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மித்த அளவில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் சுகாதார கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது அதிக அளவான தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் 17000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களிலும் 2000 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் சுகாதார கட்டமைப்பிற்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,