டெல்லிக்கு மூன்று தூதுக்குழுக்களை அனுப்பிய விடுதலைப் புலிகளின் தலைவர்! பகிரங்கமாகும் பல தகவல்கள் (Video)
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தார் என்பதை சொல்ல முடியும். பழ.நெடுமாறன் எப்படி ஈழப் பிரச்சினையில் இருந்து விலகிச் சென்றார் என்பதையும் கூற முடியும் என தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
காசி ஆனந்தன் மற்றும் நெடுமாறன் ஆகியோர் ஈழப் போராட்டத்தில் நாங்கள் பிதா மகன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் என்று இவர்கள் சொல்லுகிற கதையெல்லாம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவத்திற்கு முன்னால், ராஜீவின் கொலைக்கு பின்னால் என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு இவர்கள் இருவரும் அன்னியப்பட்டு போய்விட்டார்கள்.
இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்று திரும்பிய பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ராஜீவ் காந்தியிடம் மூன்று தூதுக்குழுக்களை அனுப்பி வைத்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
