விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய பெண்ணுக்கு விடுதலை
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த பெண் இன்று(18.01.2024) பெண் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் மாவீரர் தினத்திற்கு முதல் நாள் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயர் பொறித்த கேக்கை வெட்டிய காரணத்திற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
மட்டக்களப்பு - மாவீரர் தின நாளில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியதாக குறித்த பெண்ணும் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஊடாக விடுதலையாகியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri