தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியினரால் பிரசார பணிகள் முன்னெடுப்பு!
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர் மற்றும் மாதகல் உட்பட்ட பகுதிகளில் இன்று(16) காலை முதல் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரசார கூட்டம்
இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் , இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை மகளிர் அணி, இளைஞர் அணியினர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, வட்டுக்கோட்டை மூளாய் வேரம் பகுதியில் நாளை(17) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தொகுதிக்கிளையின் பிரசாரகூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
