முதியோர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மார்ச் 20 ஆம் திகதி முதல் தொடர்புடைய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று முதியோர் செயலகத்தின் இயக்குநர் சதுரா மிகிடும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள பயனாளிகள்
நலத்திட்டத்தின் மூத்த பயனாளிகளுக்கான உதவித்தொகை, நலத்திட்டப் பலன்கள் வாரியத்தால் சீட்டு முறை மூலம் நேரடியாக நலக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
அதன்படி, இதுவரை உதவித்தொகை பெறாத குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு மட்டும் மார்ச் 20 ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் உள்ளிட்ட பணம் செலுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பயனாளிகள் எந்த சிரமமும் இல்லாமல் பணத்தைப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
